தேசிய அனர்த்த நிலையை பிரகடனம் செய்யுமாறு இலங்கை நிர்வாக சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு உரிய அதிகாரி ஒருவரை நியமிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் நிலைமைகளை சாதாரண முகாமைத்துவம் செய்வதில் சிக்கல் நிலை காணப்படுவதாக இலங்கை நிர்வாக சேவை சங்கம் தெரிவித்துள்ளது
அத்துடன், மாத்தறை பிரதேச செயலாளருக்கு நெருக்கடி ஏற்படுத்திய மாத்தறை வைத்தியசாலையின் பணியாளர்களுக்கு மற்றும் வடமத்திய மாகாண ஆளுநரின் செயலாளரது பணிகளுக்கு இடையூறு விளைவித்த குருணாகல் மாநகர முதல்வர் ஆகியோருக்கு எதிராக இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட நேரிடும் என இலங்கை நிர்வாக சேவை சங்கம் தெரிவித்துள்ளது